அரசு ஆசிரியர்களுக்கு 3 மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும்: அரசுக்கு தமிழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
விழுப்புரம்: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத பிரச்சனையால் அரசு ஆசிரியர்களுக்கு 3 மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அச்சங்கத்தின் தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய அமைக்கப்பட்ட குழுவின் காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவது, தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி வருவதாக கூறினார்.
எனவே தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிக்க வேண்டும் என்றார். செல்லாத நோட்டு பிரச்சனையால் அரசு ஆசிரியர்களுக்கு நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
விழுப்புரம்: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத பிரச்சனையால் அரசு ஆசிரியர்களுக்கு 3 மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அச்சங்கத்தின் தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய அமைக்கப்பட்ட குழுவின் காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவது, தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி வருவதாக கூறினார்.